’’திராவிடக் கொடி பிடிப்போம்’’ -வலியுறுத்தும் வைரமுத்து

 

’’திராவிடக் கொடி பிடிப்போம்’’ -வலியுறுத்தும் வைரமுத்து

தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம் என்று வலியுறுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

கல்வியை மேம்படுத்துவதற்காக மத்திய அரசினால் வடிவமைக்கப்பட்டதுதான் தேசிய கல்விக்கொள்கை. 1968ஆம் ஆண்டில் இந்திராகாந்தி ஆட்சியின்போது முதல் தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்பின்னர், 1986ஆம் ஆண்டில் ராஜீவ்காந்தி ஆட்சியில் இரண்டாம் தேசிய கல்விக்கொள்கை வந்தது. 30 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நரேந்திரமோடி ஆட்சி்யில் மூன்றாவது கல்விக்கொள்கை கொண்டுவரப்படுகிறது.

மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக கொண்டு வரும் இந்த புதிய கல்விக்கொள்கையினால் தமிழ்நாடு மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதால்தான் இக்கொள்கைக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

புதிய கல்விக்கொள்கையினால் இரு மொழிக் கொள்கை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இனி மும்மொழிக் கொள்கையை ஏற்றுச் செயல்படுத்தப் பட கட்டாயம் ஆக்கப்படும். மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்புக்கு இடமேற்படுத்தும் இத்திட்டத்திற்கு ஆரம்ப நிலையிலேயே அதிமுக அரசு தன் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை – கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்து தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த நிலைப்பாட்டினை இவ்வாட்சி கைவிடக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார் திராவிட கழக தலைவர் கி.வீரமணி.

இதையடுத்து கவிஞர் வைரமுத்துவும் தனது டுவிட்டர் பதிவின் மூலமாக,
‘’அண்ணா – கலைஞர் இறுதி செய்ததும், எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான். முதலமைச்சர் பழனிச்சாமி அரசும் அதைத் தாங்கிப் பிடிக்கத் தயங்கத் தேவையில்லை. தேசியக் கொடியை மதிப்போம்; திராவிடக் கொடியும் பிடிப்போம்’’அதிமுக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.