காஃபியில் இனிப்பு கம்மியா போட்டதுக்கு கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!

 

காஃபியில் இனிப்பு கம்மியா போட்டதுக்கு கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!

ஒரு கப் தேநீருக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்த விபரீதம் உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. தேநீரில் இனிப்பு குறைவாக சேர்த்ததற்க்காக இந்த கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாப்லு குமார் மற்றும் ரேணு தேவி ஜோடிக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. லக்கிம்பூர் மாவட்டத்தின் பாஸ்கவா பகுதியில் வசித்து வந்தனர். திங்கள்கிழமை அதிகாலை 5:30 மணியளவில், தேனீவில் சர்க்கரை குறைவாக இருப்பதாய் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​பாப்லு ரேணுவைக் கூர்மையான கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

காஃபியில் இனிப்பு கம்மியா போட்டதுக்கு கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!

மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு பாப்லு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அம்மா கூச்சலிடுவதைக் கண்ட குழந்தைகள் எழுந்து வந்து பார்த்தபோது தங்கள் அம்மா ரத்த வெள்ளத்தில் மிதப்பதைக் கண்டு அலறியுள்ளனர். இதையடுத்து ரேணுவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.