வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம்… கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை…

 

வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம்… கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை…

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே தென்னந்தோப்பில் உலா வந்த சிறுத்தையால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம வாணியம்பாடி அடுத்த சென்னம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். அந்த பகுதியில் மாதகடப்பா வனப்பகுதியை யொட்டி, இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு நேற்று மதியம் வாணியம்பாடியை சேர்ந்த காவலர் மல்லிகா மற்றும் சில பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாணியம்பாடி அருகே சிறுத்தை நடமாட்டம்… கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை…

அப்போது, தெரு நாய்கள் துரத்தியதில் சிறுத்தை ஒன்று ஓடியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள், அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இது குறித்து திருப்பத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், சிறுத்தை நடமாட்டம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தென்னந்தோப்பில் பதிவாகிய சிறுத்தையின் கால்தடங்களை ஆய்வுசெய்த வனத்துறையினர், சிறுத்தையை நடமாட்டத்தை கண்காணிக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர். மேலும், கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.