“சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

 

“சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

அதிமுக கொடியை பயன்படுத்தியதற்காக சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையாகி உள்ள சசிகலா கொரோனாவிலிருந்து மீண்ட நிலையில் பெங்களூரு அரசு மருத்துவமனையில் இருந்தும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவமனையிலிருந்து காரில் சென்ற சசிகலா, தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது பேசும் பொருளாகியுள்ளது. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. டிடிவி தினகரன் , தான் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டு மன்னிப்பு கடிதம் அளித்தால் அவரை அதிமுகவில் இணைக்க தலைமை பரிசீலனை செய்யும் ” என்றார்.

“சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல்!

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “டிடிவி தினகரன் பற்றி கே.பி முனுசாமி சொன்னது அவரது சொந்த கருத்து .கட்சியில் இருந்து அறிக்கை வந்தால் மட்டுமே அதிகாரப்பூர்வ கருத்தாக இருக்கும். சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட எந்த பதவியிலும் இல்லை. அப்படி இருக்கும் போது, சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டப்படி குற்றம், சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.