தம்பதியை கட்டிப்போட்டு விட்டு, 50 சவரன் நகைகள் கொள்ளை!

 

தம்பதியை கட்டிப்போட்டு விட்டு, 50 சவரன் நகைகள் கொள்ளை!

சிவகங்கை

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற வங்கி ஊழியர், அவரது மனைவியை கட்டிப்போட்டு விட்டு 50 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் நேற்று முன்தினம் இரவு தனியாக இருந்தபோது, வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த 3 நபர்கள், அவர்களை தாக்கி கட்டிப்போட்டு உள்ளனர். பின்னர், பீரோவில் இருந்த 50 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளையும், ரூ.2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர்.

தம்பதியை கட்டிப்போட்டு விட்டு, 50 சவரன் நகைகள் கொள்ளை!

பின்னர், கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு தப்பிய தம்பதியினர், இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார், நேற்று கொள்ளை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து, அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.