அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் உள்ளனர்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பகிரங்க பேட்டி

 

அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் உள்ளனர்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பகிரங்க பேட்டி

தி.மு.க நிர்வாகிகள் மட்டுமின்றி அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள் பலரும் பா.ஜ.க-வில் இணைய பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை பா.ஜ.க பக்கம் இழுக்கும் வேலை நடந்து வருகிறது. தி.மு.க மட்டுமின்றி அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் குறி வைக்கப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அதை உறுதி செய்யும் வகையில் தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.

அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் உள்ளனர்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பகிரங்க பேட்டி


பெரம்பலூர் பா.ஜ.க செயற்குழுவில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “தி.மு.க முன்னணி நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலின் மீது அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் பா.ஜ.க-வுடன் தொடர்பில் உள்ளார்கள். அதே போல் அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் உள்ளனர்.

அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் உள்ளனர்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பகிரங்க பேட்டி


தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை. தமிழகத்தில் எங்கள் அரசியல் மற்றும் சித்தாந்த எதிரியாக தி.மு.க உள்ளது. இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத, பிரிவினையைத் தூண்டும், மொழியை, ஒரு தரப்பினரை எதிர்க்கும் மோசமான கட்சி தி.மு.க.
அ.தி.மு.க-வின் முக்கிய எதிரி தி.மு.க என்பதால் அ.தி.மு.க-வுடன் நாங்கள் நட்பாக உள்ளோம். பல விஷயங்களில் அ.தி.மு.க எங்களுடன் ஒத்துப் போவதால் நட்பு தொடர்கிறது” என்றார்.

அ.தி.மு.க முக்கிய பிரமுகர்களும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் உள்ளனர்! – பா.ஜ.க பொதுச் செயலாளர் பகிரங்க பேட்டி


விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உதவித் திட்டத்தில் முறைகேடு நடந்தது பற்றிக் கேட்ட போது, “தமிழகத்தில் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இதை மீட்பதில் அரசு அக்கறை செலுத்தி வருகிறது. அது போதாது. முறைகேடு செய்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அ.தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே, அ.தி.மு.க-வை சிதைக்கும் வேலையிலும் ஈடுபட்டு வருவதாக பா.ஜ.க பகிரங்கமாக தெரிவித்துள்ளது. இதை அ.தி.மு.க தலைமை எப்படி கையாளப்போகிறது என்ற கவலை அ.தி.மு.க தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.