“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” : கமல் ஹாசன் கடும் தாக்கு !

 

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” : கமல் ஹாசன் கடும் தாக்கு !

சென்னையில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நடிகர் கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார் .

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” : கமல் ஹாசன் கடும் தாக்கு !

சென்னை யானைக்கவுனியில் தலில் சந்த் (74), மனைவி புஷ்பா பாய் (70) மகன் ஷீத்தல் (38) ஆகிய மூவரும் துப்பாக்கியால் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார், இவர்கள் மூவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” : கமல் ஹாசன் கடும் தாக்கு !

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் அக்கம் பக்கத்தினர் உள்ளார்கள் என்ற பயமின்றி சத்தமில்லாமல் நடந்த கொலை பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. அத்துடன் கொலை நடந்த வீட்டுக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து சென்றனர். அத்துடன் உயிரிழந்த மூவரின் உடல்களும் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் , “தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.