இரவு முழவதும் கொட்டி தீர்த்த மழை : மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்!

 

இரவு முழவதும் கொட்டி தீர்த்த மழை : மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்!

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கினாலும் சென்னையை பொறுத்தவரை பெரிதாக மழை பெய்யவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இரவு முழவதும் கொட்டி தீர்த்த மழை : மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்!

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் அதிகமான மழை பெய்து வருகிறது. குரோம்பேட்டை, பம்மல், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 4 மணி நேரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதிகாலை 2.30 மணி வரை பதிவான மழை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 8 சென்டிமீட்டர், கொளப்பாக்கத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இரவு முழவதும் கொட்டி தீர்த்த மழை : மகிழ்ச்சியில் சென்னைவாசிகள்!

அத்துடன் நங்கநல்லூர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மேலும் சென்னையின் மற்ற பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்தால் தவித்து வந்த சென்னை வாசிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.