48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

 

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் திரையுலகை மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் சிவ சேனாவின் பத்திரிகையான சாமனாவில் சஞ்சய் ரவுத் எழுதியுள்ள கட்டுரையில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது தந்தையுடன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை. இது உண்மை. தனது தந்தை கேகே சிங்கை சந்திக்க பாட்னாவுக்கு அவர் எத்தனை முறை சென்றார்? அவரது தந்தை மீது எனக்கு அனுதாபங்கள் உள்ளன. பல விஷயங்கள் வெளியே வரும் என தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே அவருக்கு வில்லனாக மாறியுள்ளது.

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும், அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு குறித்து தவறாக பேசியதற்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என சஞ்சய் ரவுத்துக்கு சுஷாந்த் உறவினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினரும், பீகார் பா.ஜ.க. தலைவருமான நீராஜ் சிங் பப்லூ, சஞ்சய் ரவுத்துக்கு அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸில், சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கும், அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு குறித்து தவறாக பேசியதற்கு 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால் தங்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்துல மன்னிப்பு கேளுங்க.. சிவ சேனா தலைவருக்கு நோட்டீஸ்… மறைந்த பாலிவுட் நடிகரின் உறவினர்

இது குறித்து சிவ சேனா தலைவர் சஞ்சய் ரவுத் கூறுகையில், எங்கள் தரப்பில் ஏதேனும் தவறு ஏற்பட்டு இருந்தால், அதை பற்றி சிந்திப்போம். ஆனால் நான் அதை கவனிக்க வேண்டும். நான் இதுவரை கூறியது என்னிடம் உள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டது. சுஷாந்தின் குடும்பத்தினர் அவர்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் பேசுகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.