மாவீரர் தினம்-முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஏராளமானோர் தீபம் ஏந்தி அஞ்சலி

 

மாவீரர் தினம்-முள்ளிவாய்க்கால்  நினைவிடத்தில் ஏராளமானோர் தீபம் ஏந்தி அஞ்சலி

தஞ்சாவூர்

மாவீரர் தினத்தையொட்டி, தஞ்சையில் உள்ள முல்லிவாய்க்கால் நினைவிடத்தில் நேற்று ஏராளமானோர் தீபம் ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

மாவீரர் தினம்-முள்ளிவாய்க்கால்  நினைவிடத்தில் ஏராளமானோர் தீபம் ஏந்தி அஞ்சலி

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நவம்பர் 27ஆம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நேற்று தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், உலக தமிழர் பேரமைப்பு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில், அந்த அமைப்பின் துணை தலைவர் பொன்னிறைவன் தலைமையில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, ஈழ விடுதலை போரில் மரணமடைந்த மாவீரர்களின் உறவினர்கள் பெரும் தீபம் ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

மாவீரர் தினம்-முள்ளிவாய்க்கால்  நினைவிடத்தில் ஏராளமானோர் தீபம் ஏந்தி அஞ்சலி

தொடர்ந்து, இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மாவீரர்கள் ரத்தம் சிந்திய மண்ணிற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, ஏராளமானோர் கைகளில் தீபம் ஏந்தி, போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.