`ரூ.1.25 கேட்டு மிரட்டுகிறார் !’- லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நடிகை வனிதா பகீர்

 

`ரூ.1.25 கேட்டு மிரட்டுகிறார் !’- லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நடிகை வனிதா பகீர்

“நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் லட்சுமி ராமகிருஷ்ணன் தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள்” என்று நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான நடிகை வனிதா 4வது கணவராக பீட்டர் பாலை தேர்ந்தெடுத்தார். இவர்களின் திருமணம் அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த திருமணம் விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் வனிதா பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி வனிதா தரக்குறைவாக பேசினார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீஸை தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டுள்ள வனிதா, “நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார். இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார். இது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அவரது வழக்கறிஞர் பணம் கேட்டு அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன்” என கூறியுள்ளார்.