பெய்த மழையால் ஏரிகள் நிரம்பின – திருச்சியில் விவசாய பணி தீவிரம்
Sep 14, 2020, 14:59 IST1600075753000
தமிழகத்தில் கடந்த சில மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் வெப்பத்தின் காரணமாக அதிக அளவில் வெளியே செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாகினர். முக்கியமாக விவசாயிகள் நீர் இல்லாமல் விவசாயம் பண்ண முடியாத சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் மழை பெய்ததால் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் நிரம்பின. இதனால் திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து விட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் உள்ள ஏரி முழுவதும்
நிரம்பியதால் அந்த பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் இருப்பதால் முழுவீச்சில் விவசாயப் பணியை தொடங்கியுள்ளனர்.