“கட்டுமஸ்தானவன் கழட்டி விட்டுட்டானே”-ஆணழகனை ஆசை நாயகனாக வைத்திருந்த பெண் பேராசிரியை செய்த சதி.

 

“கட்டுமஸ்தானவன் கழட்டி விட்டுட்டானே”-ஆணழகனை ஆசை நாயகனாக வைத்திருந்த பெண் பேராசிரியை செய்த சதி.

வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி, ஆணழகனை கொலை செய்த கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்..

“கட்டுமஸ்தானவன் கழட்டி விட்டுட்டானே”-ஆணழகனை ஆசை நாயகனாக வைத்திருந்த பெண் பேராசிரியை செய்த சதி.

கர்நாடக மாநிலம் கோலார் டவுன் கல்பேட்டையில் உள்ள மகாலட்சுமி லே-அவுட்டில் வசித்து வந்தவர் 25 வயதான ஜமீரர் கட்டு கோப்பான உடற்கட்டு கொண்டவர் ஆவார் .இவர் ஆணழகன் போட்டியிலும் பங்கேற்று பல பரிசுகளை வாங்கியுள்ளார் . இந்த நிலையில் ஜமீருக்கும், 45 வயதான ஷாகியா என்ற கல்லூரி பெண் பேராசிரியைக்கும் கள்ள காதல் ஏற்பட்டது .

இந்த நிலையில் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர் . இதற்கிடையே ஜமீருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதுபற்றி அறிந்த ஷாகியா வேறொரு பெண்ணை திருமணம் செய்ய கூடாது என்று ஜமீரிடம் கூறியுள்ளார்.

ஆனாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜமீர் வேறொரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து கொண்டார் .இதனால் அந்த ஷாகியா அவர் மீது கோவமாக இருந்தார் .அதனால் அவரை கொலை செய்ய முடிவெடுத்தார் .அதன் படி கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து அவரை கொல்ல சொன்னார் அதனால் அந்த பெண் ஜமீரை ஹைதராபாத்துக்கு வர சொன்னார் .அவரின் பேச்சை நம்பி அங்கு சென்ற ஜமீரை அந்த பெண் கொலை செய்து புதைத்து விட்டார் .பின்னர் அவரின் மனைவி கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் விசாரணை செய்து அவரை கொன்ற அந்த ஷாகியாவையும் கூலிப்படையினரையும் கைது செய்தனர்.