‘பெண் காவலர் உயிரிழப்பு’ : பிரசவத்தின் போது நேர்ந்த சோகம்!

 

‘பெண் காவலர் உயிரிழப்பு’ : பிரசவத்தின் போது நேர்ந்த சோகம்!

விளாத்திகுளம் அருகே பிரசவத்தின் போது பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் நாகலாபுரம் பகுதியில் வசித்து வந்த தம்பதி ராமநாதன்- முத்துலெட்சுமி. ராமநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். முத்துலெட்சுமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், முத்துலெட்சுமி மீண்டும் கருவுற்றிருக்கிறார்.

‘பெண் காவலர் உயிரிழப்பு’ : பிரசவத்தின் போது நேர்ந்த சோகம்!

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முத்துலெட்சுமி பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்ததன் பேரில், முத்துலெட்சுமிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அதில், அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே, சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக முத்துலெட்சுமி உயிரிழந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு முத்துலெட்சுமி காவலராக பதவியேற்றதாகவும், அப்போதில் இருந்து அவர் சுறுசுறுப்பாக பணியாற்றி வந்ததாகவும் விளாத்திகுளம் போலீசார் தெரிவித்துள்ளனர்.