பெண் காவலரின் உயிரை பறித்த கொரோனா… பரிதவிக்கும் பச்சிளங்குழந்தை!

 

பெண் காவலரின் உயிரை பறித்த கொரோனா… பரிதவிக்கும் பச்சிளங்குழந்தை!

சென்னையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்த மறுநாளே கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் வசந்தா (47) மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட வசந்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி எழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பெண் காவலரின் உயிரை பறித்த கொரோனா… பரிதவிக்கும் பச்சிளங்குழந்தை!

இந்த நிலையில், இன்று காலை அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பிரசவித்ததும் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தும் கொரோனா தாக்கத்தினால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். கொரோனாவால் உயிரிழந்த வசந்தாவின் குடும்பத்தினருக்கும் அவரது குழந்தைக்கும் அரசு உதவி செய்ய வேண்டும் வேண்டும் என அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.