‘தேங்கியிருந்த மழை நீர்’ சாலையில் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி!

 

‘தேங்கியிருந்த மழை நீர்’ சாலையில் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கியதால் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், ஆங்காங்கே மின்கம்பங்களில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘தேங்கியிருந்த மழை நீர்’ சாலையில் சென்ற பெண் மின்சாரம் தாக்கி பலி!

புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அந்த பெண், சாலையில் மழை நீர் தேங்கி இருந்ததால் சாலை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்துள்ளார். அவர் சென்ற வழியே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் கசிந்து நீரில் பாய்ந்துக் கொண்டிருந்துள்ளது. இதனை அறியாத அந்த பெண், மழை நீரில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கியதில், சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.