ஆசனூர் அருகே பெண்ணை மிதித்துக் கொன்ற காட்டு யானை; அதிர்ச்சியில் கிராம மக்கள்!

 

ஆசனூர் அருகே பெண்ணை மிதித்துக் கொன்ற காட்டு யானை; அதிர்ச்சியில் கிராம மக்கள்!

ஆசனூர் அருகே பறவைகளை விரட்ட சென்ற பெண் ஒருவரை யானை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக யானைகள் தாக்குவதில் மனிதர்கள் மரணமடையும் சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. காட்டு பகுதியில் இருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானைகள், அவ்வழியே வருபவர்களை அடித்து கொன்று விடுகிறது. குறிப்பாக சத்திய மங்கலம் புலிகள் காப்பகம் அருகே இதுவரை பலர் யானை தாக்குதலால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே இருக்கும் ஆசனூர் அருகே யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆசனூர் அருகே பெண்ணை மிதித்துக் கொன்ற காட்டு யானை; அதிர்ச்சியில் கிராம மக்கள்!

ஆசனூர் வன சரகத்திற்கு உட்பட்ட அட்டபாடி கிராமத்தை சேர்ந்த சங்கரன் என்பவரது மனைவி சலாம்மா(45). இவர் நேற்று இரவு தனது தோட்டத்தில் பயிரை சேதப்படுத்தும் பறவைகளை விரட்ட முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த யானை அவரை மிதித்து கொன்றுள்ளது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும் போலீசாரும் சாலம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.