‘சுவரில் சாய்ந்து நின்ற பெண்’ மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

 

‘சுவரில் சாய்ந்து நின்ற பெண்’ மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

சென்னை தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள பீர்க்கங்கரணை பகுதியை சேர்ந்த பெண் கௌசல்யா. இவர் இன்று காலை அவரது வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து கொண்டு நின்றிருக்கிறார். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட கௌசல்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார், கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர் மழையால் சுவரில் மின் கசிவு ஏற்பட்டிருந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

‘சுவரில் சாய்ந்து நின்ற பெண்’ மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயலால் கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில், அந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.