‘பேருந்தின் டயர் ஏறியதில் பெண் மரணம்’: மகள் கண்முன்னே நேர்ந்த சோகம்!

 

‘பேருந்தின் டயர் ஏறியதில் பெண் மரணம்’: மகள் கண்முன்னே நேர்ந்த சோகம்!

திருப்பூர் அருகே அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி பெண் ஒருவர் பலியானதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த மாசித் என்பவரின் மனைவி சுருதி (25). மகள் ஆதிரா(1). மாசித் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருவதால், குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், சுருதி தனது அம்மா சந்திரிகா (45) மற்றும் மகள் ஆதிராவுடன் ஸ்கூட்டியில் திருப்பூரில் இருக்கும் துணிக் கடைக்கு சென்றுள்ளனர்.

‘பேருந்தின் டயர் ஏறியதில் பெண் மரணம்’: மகள் கண்முன்னே நேர்ந்த சோகம்!

வீடு திரும்பும் போது ஸ்கூட்டியை சுருதி ஓட்ட, அவரது தாயாரும் மகளும் பின்னல் அமர்ந்திருந்துள்ளனர். இவர்கள் திருப்பூர் தெற்கு காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில், ஸ்கூட்டியில் இருந்த குழந்தை உட்பட 3 பேரும் கீழே விழுந்த நிலையில், சந்திரிகா பேருந்து டயருக்கு அடியில் விழுந்துள்ளார். பேருந்தின் பின் சக்கரம், அவரது வயிற்றின் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த ஆதிராவும், சுருதியும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். தனது கண் முன்னே தாய், உயிரிழந்ததை பார்த்து சுருதி கதறி அழுதது காண்போரை கலங்க செய்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியிருந்த நிலையில், அவை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.