கிணற்றில் விழுந்து தற்கொலை : வயிற்று வலியால் பெண் எடுத்த விபரீத முடிவு!

 

கிணற்றில் விழுந்து தற்கொலை : வயிற்று வலியால் பெண் எடுத்த விபரீத முடிவு!

காஞ்சிபுரத்தில் வயிற்று வலியால் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், வெள்ளை குளம் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (55). இவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். பூங்கோடிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதோடு, கணவனை இழந்த துக்கத்தில் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கிணற்றில் விழுந்து தற்கொலை : வயிற்று வலியால் பெண் எடுத்த விபரீத முடிவு!

இந்த நிலையில், இன்று காலை சர்வ தீர்த்த குளத்தில் பூங்கொடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயிற்று வலியால் பூங்கோடி தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை செய்து கொண்ட பூங்கொடியை அவரது மகன்கள் இன்று மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.