பெண்கள் `ஸ்லிம்’மாக இருக்க, தோப்புக்கரணம் போடுங்கள்..!

 

பெண்கள் `ஸ்லிம்’மாக இருக்க, தோப்புக்கரணம் போடுங்கள்..!

தோப்புக்கரணம்… எண்பது, தொண்ணூறுகளில் பள்ளிப்பருவத்தில் ஒழுங்காக வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனை தோப்புக்கரணமாகத்தான் இருக்கும். பிள்ளையார் கோயில்களில் பக்தர்கள் தோப்புக்கரணம் போடுவதைப் பார்த்திருப்போம். அந்தவகையில் நம்மில் சிலர் தோப்புக்கரணம் போட்டிருக்க வாய்ப்பு உள்ளது. தோப்புக்கரணம்தானே என்று வெறுமனே சொல்லிவிட்டு கடந்துவிட முடியாது. அதில் ஓர் அறிவியல், மருத்துவம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது.

பெண்கள் `ஸ்லிம்’மாக இருக்க, தோப்புக்கரணம் போடுங்கள்..!
Thoppukaranam

பொதுவாக நம்நாட்டில் பெருவாரியாக உள்ள இந்துக்கள் பின்பற்றக்கூடிய பல வழிமுறைகளில் மருத்துவ அறிவியல் ஒளிந்திருக்கிறது. அந்த உண்மை தெரியாமல் பலர் தோப்புக்கரணத்தை வெறும் சம்பிரதாயமாகவே செய்துவிட்டுப் போகிறார்கள். தோப்புக்கரணம் செய்வதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை அறிந்த வெளிநாட்டினர் அதற்கு `சூப்பர் பிரெய்ன் யோகா’ என்று ஒரு பெயர் வைத்து அதன்மூலம் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம், `சூப்பர் பிரெய்ன் யோகா’ செய்தால் மூளை சுறுசுறுப்பாகும் என்கிற உண்மையை வெளிநாட்டினர் சொல்லித்தான் தோப்புக்கரணத்தின் அருமை நமக்குத் தெரிந்திருக்கிறது.
தோப்புக்கரணம் போடும்போது காதில் உள்ள முக்கியப்புள்ளிகளை கைவிரல்களால் இழுத்துப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். அப்போது ஒரு அழுத்தம் உண்டாகும். அதாவது, வலது கை இடது காதின் கீழ் பகுதியையும் இடது கை வலது காதின் கீழ் பகுதியையும் இறுக்கமாக அழுத்திப் பிடித்தபடி கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். அப்படி கீழே உட்காரும்போது மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவேண்டும், எழுந்திருக்கும்போது மூச்சை மெதுவாக வெளியே விடவேண்டும். கீழே உட்காரும்போது 10 நொடி உட்கார்ந்து எழுந்திருக்கவேண்டும். காலையில் குளிப்பதற்கு முன்பும், மாலையில் குளிப்பதற்கு முன்பும் தோப்புக்கரணம் போடுவது நல்லது.

பெண்கள் `ஸ்லிம்’மாக இருக்க, தோப்புக்கரணம் போடுங்கள்..!
Thoppukkaranam

தோப்புக்கரணத்தில் நேராக உட்கார்ந்து எழுந்திரிப்பது ஒரு முறை, கால்களை ஒன்றுடன் ஒன்றாக பின்னியபடி செய்வது ஒரு முறை. இதை இன்னொருவருடன் சேர்ந்தும் செய்யலாம். அதாவது எதிரே நிற்கும் ஒருவரின் காதை ஒருவர் பிடிக்கவேண்டும்; எதிரே நிற்பவர் முதலாமவரின் காதைப் பிடிக்கவேண்டும். இதைச் செய்யும்போது சிலநேரங்களில் கஷ்டமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும். பொதுவாக முதல் தடவை தோப்புக்கரணம் போடுபவர்கள் ஐந்துதடவை மட்டுமே செய்து பழகவேண்டும். ஆர்வமிகுதியால் முதல்நாளே அதிகமாக செய்தால் கால் தொடைப்பகுதியிலும் கால் மூட்டுக்குக் கீழே உள்ள சதைப்பகுதியிலும் பிடிப்பு உண்டாகி வலி எடுக்கும். அதனால் தோப்புக்கரணம் போடுவதை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொள்ள வேண்டும். முதலில் சிலநாட்கள் ஐந்து தோப்புக்கரணமும் இரண்டு மூன்று நாள்கள் கழித்து 10, 15 என்றும் கூட்டிக்கொள்ளலாம். ஓரளவு பழகிவிட்டால் தினமும் 15-ல் இருந்து 50 தோப்புக்கரணம் வரை போடலாம்.
தோப்புக்கரணம் போடும்போது தொடர்ந்து உட்கார்ந்து எழுந்திருப்பதால் காதின் நுனிப்பகுதியில் ஏற்படக்கூடிய அழுத்தம் நரம்புகளின் வழியாக மூளை வரை செல்லும். அப்போது மூளையில் ஏற்படும் மாற்றத்தால் புத்துணர்ச்சியுடன் செயல்படத் தூண்டும். அத்துடன் மந்தநிலையில் உள்ள மற்ற உடல் உறுப்புகளும் உற்சாகமாகிவிடும். இதை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர் அதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆட்டிசம் குறைபாடு, மன இறுக்க நோய்களுக்கும்கூட தோப்புக்கரணம் நல்ல தீர்வு தருவதாக அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். பெண்கள் மாதவிடாய் காலத்திலும் கர்ப்ப காலங்களிலும் தோப்புக்கரணம் போடாமல் இருப்பது நல்லது. ஆனால், மற்ற காலகட்டங்களில் பெண்கள் தோப்புக்கரணம் போட்டு வந்தால் பிரசவகாலங்களில் சிக்கல்கள் எதுவும் வராது. தொப்பை உள்ள ஆண் ,பெண் எல்லோருக்கும் இந்த தோப்புக்கரணம் நல்ல தீர்வைத்தரும். பெண்கள் இடை சிறுத்து ஸ்லிம்மாக இருக்கவேண்டுமென்றால் தோப்புக்கரணம் போடுங்கள்.
தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் நினைவு செல்களின் வளர்ச்சி தூண்டப்படும். மந்தபுத்தியாக உள்ள மாணவர்களின் மூளை நன்றாகச் செயல்படும். ஞாபக சக்தி அதிகரித்து அறிவுக்கூர்மை கூடும். இந்த உண்மை தெரிந்ததால்தான் முற்காலத்தில் மந்தமான மாணவர்களை நல்ல அறிவாற்றல் உள்ள மாணவர்களாக மாற்ற தோப்புக்கரணம் போட வைத்தார்கள். அதேபோன்று சேட்டை செய்யும் மாணவர்களையும் தோப்புக்கரணம் போடச் சொல்வது வழக்கம். சில ஆசிரியர்கள் மாணவர்களின் காதைப் பிடித்து திருகுவார்கள். இதேபோல் பிள்ளையார் கோயில்களில் தோப்புக்கரணம் போடுவது மூலம் மூளை புத்துணர்ச்சி பெற்று சிறப்பாக செயல்படுவார்கள்.

பெண்கள் `ஸ்லிம்’மாக இருக்க, தோப்புக்கரணம் போடுங்கள்..!
Thoppukaranam

இது மட்டுமல்ல ஆண்மைக்குறை உள்ளவர்கள்… அதாவது விரைப்புத்தன்மை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது தொடைப்பகுதிக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும் என்பதால் ஆணுறுப்பை வலுப்படுத்தும். இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் தோப்புக்கரணத்தைப் போட்டு எல்லோரும் பலன் பெறலாம்