இனி மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிருக்கே!

 

இனி மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிருக்கே!

சென்னை மெட்ரோ ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் வகுப்பு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகளில் திங்கட்கிழமை முதல் மகளிர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிர் மட்டும் பயணிக்கும் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இனி மெட்ரோ ரயிலில் முதல் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் மகளிருக்கே!

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மகளிர் பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் முழு நேரமும் முழுமையாக கண்காணிப்பது, மகளிருக்கென தனி கழிப்பறைகள், வாடிக்கையாளர் சேவை வசதிகள், மது அருந்தியவர்கள் பயணிக்கத் தடை புகை பிடிப்பதற்கு தடை மற்றும் பிற இடையூறுகளிலிருந்து பாதுகாப்பது, அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணியாளர்களை பணியமர்த்தி கண்காணிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.