தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது- முருகன்

 

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது- முருகன்

இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக சென்னை வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை, கலைவாணர் அரங்கில் தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். ரூ.67,378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளையும் அமித்ஷா காணொளி வாயிலாக தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது- முருகன்

தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு எம்.ஆர்.சி நகரில் இருக்கும் லீலா பேலஸ் ஹோட்டலுக்கு அமித்ஷா சென்றார். அங்கு பாஜக மாவட்ட – மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், “வெற்றி வேல் …வீரவேல்! தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சி ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து கொண்டிருக்கிறது. கொரோனாவை கையாண்டதில் மோடி உலகத்திற்கே வழி கட்டியாக விளங்கி வருகிறார். NEP, மும்மொழி கொள்கை போன்றவற்றை திமுக எதிர்க்கிறது, ஆனால் அவர்கள் கட்சி தலைவர்களின் பள்ளிகளில் மூன்றாம் மொழி கற்று கொடுக்கிறார்கள். விவசாய சீர் திருத்தத்தை நாங்கள் கொண்டு வந்தோம். பாஜகவினர் விவசாயிகளின் நண்பர்கள். தடைகளை மீறி திருசெந்தூரில் வெற்றி வேல் யாத்திரை நிறைவு பெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்ட பேரவையை அலங்கரிப்பார்கள்” எனக் கூறினார்.