வேலுடன் திருத்தணியில் எல்.முருகன் சாமி தரிசனம்!

 

வேலுடன் திருத்தணியில் எல்.முருகன் சாமி தரிசனம்!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேலுடன் திருத்தணியில் சாமி தரிசனம் செய்தார்.

பாஜக சார்பில் நவ.6(இன்று) முதல் டிச.6 வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. திருத்தணியில் தொடங்கும் இந்த யாத்திரை ரத்தினகிரி, சென்னிமலை, மருதமலை, பழனி வழியாக டிச.6ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனாவை காரணம் காட்டி, இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது.

வேலுடன் திருத்தணியில் எல்.முருகன் சாமி தரிசனம்!

யாத்திரை இன்று திருத்தணியில் தொடங்க உள்ள நிலையில், அதில் பங்கேற்க எல்.முருகன் காலை பாஜக நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார். அவரை காவலர்கள் வழிமறித்தனர். அப்போது அவர், திருத்தணியில் முருகனை தரிசிப்பது எனது உரிமை என்றும் தடையை மீறி யாத்திரை தொடரும் என்றும் கூறிவிட்டு பயணத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் சற்று முன்னர் திருத்தணிக்கு சென்றடைந்த எல்.முருகன், வேலுடன் சாமி தரிசனம் செய்தார். இதன் பிறகு அவர் யாத்திரையில் பங்கேற்றால் கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம் தன் கடமையை செய்யும் என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.