உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி நீடிக்கிறதா? – எல்.முருகன்

 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி நீடிக்கிறதா? – எல்.முருகன்

காஞ்சிபுரம் பழைய ரயில்வே கேட் பகுதியில் அமைந்துள்ள குருசேத்திரப் பள்ளியில் இன்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏழு எளியோருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஏழை மக்கள் உள்ளிட்டோருக்கு மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வழங்கினார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி நீடிக்கிறதா? – எல்.முருகன்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், “தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரை மு.க. ஸ்டாலின் புகழ் பாடும் உரை ஆகவே உள்ளது. தேர்தல் வாக்குறுதியில் ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் கொடுத்துள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களின் மன உறுதிகளை குலைக்கும் செயலை திராவிட முன்னேற்றக் கழகம் செய்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விடுபட்ட மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி எப்பொழுது தேர்தல் வந்தாலும் தயாராக உள்ளது. தற்போது இருக்கும் கூட்டணி தொடர்ந்து இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டு வருகிறது. மாநில நிதி அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்” எனக் கூரினார்.