டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

 

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நோய்தொற்று பரவல் கட்டுக்குள் வராத கோயமுத்தூ, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ,கரூர், நாமக்கல், தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மற்ற 27 மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டாஸ்மாக் திறப்புக்கு எதிராக பாஜகவினர் நாளை ஆர்ப்பாட்டம்- எல்.முருகன்

இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து பாஜகவினர் வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி போராடுவோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பாஜக அலுவலகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. கொரோனோ காரணமாக தலைவர்கள் அவர்களின் வீடுகளிலே கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவர் எனவும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.