காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே கொள்கை- எல். முருகன்

 

காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே கொள்கை- எல். முருகன்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல். முருகன், “காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கைப்படி தென் மாநிலத்திலும் பாஜகவுக்கு வெற்றிதான். காங்கிரஸ் தற்போது ஒரு சில இடங்களில் மட்டும்தான் உள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு எங்கள் வெற்றியை பாதிக்காது. எரிபொருட்களின் விலை விரைவில் குறையும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியால்தான் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதே கொள்கை- எல். முருகன்

இந்தியாவில் காங்கிரஸ் ஒரு சில இடங்களில் இல்லவே இல்லை. புதுச்சேரியில் தங்கள் எம்எல்ஏவை தக்க வைத்துக்கொள்ள திமுகவால் முடியவில்லை. துடிப்பான இளைஞர்கள் புதிதாக கட்சியில் சேருவார்கள் என்றால் அது பாஜகவில்தான் இருக்கும். தமிழகத்தில் பாஜக வெற்றிநடைப்போடும். பாஜகவின் வேல்யாத்திரை மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றுள்ளது. வெற்றிக்கு காரணம் இளைஞர் சக்தி” என தெரிவித்துள்ளார்.