இன்று மத்திய அரசால் வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் போடப்பட்டுள்ளது- எல் முருகன்

 

இன்று மத்திய அரசால் வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் போடப்பட்டுள்ளது- எல் முருகன்

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால், ஸ்பெஷலான திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கான திட்டத்தை அறிவித்தார். தமிழ்நாட்டில் பல்நோக்கு கடல் பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மத்திய அரசால் வரலாற்று சிறப்பு மிக்க பட்ஜெட் போடப்பட்டுள்ளது- எல் முருகன்

சென்னை மீன்பிடித் துறைமுகம் மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி விலையை பழைய நிலைமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “தேர்தலை மையப்படுத்தி தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படவில்லை எப்பொழுதுமே தமிழகம் பல்வேறு திட்டங்களில் அதிக பயன் அடையும் மாநிலமாக இருக்கிறது. நாட்டின் பல்வேறு துறைகளும் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பல்வேறு மாநிலங்களில் உள்ளடக்கிய ஒரு வளர்ச்சியுமாக இந்த பட்ஜெட் உள்ளது. தேசத்தின் வளர்ச்சியும், தனி மனித வளர்ச்சியும் இந்த பட்ஜெட்டானது பிரதிபலிக்கிறது, ஒவ்வொரு நிதி ஆண்டிலும் தமிழகத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தேசத்தின் வளர்ச்சியையும், தனி மனித வளர்ச்சியையும் இந்த பட்ஜெட்டானது பிரதிபலிக்கிறது” எனக் கூறினார்.