பாஜகவில் தினந்தினம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் சேர்ந்துவருகின்றனர்- எல் முருகன்

 

பாஜகவில் தினந்தினம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் சேர்ந்துவருகின்றனர்- எல் முருகன்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பாஜக மாநில தலைவர் எல். முருகன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய எல்.முருகன், “ஸ்டாலின் சமூக நீதி பற்றி பேசுவார் ஆனால் அந்த நீதி அவரிடம் இருக்காது , பெண் உரிமைப்பற்றி பேசுவார் ஆனால் அவரது கட்சியில் அது இருக்காது. திமுகவினர் வெற்றி வேல் யாத்திரைக்கு பெரும் தடையாக இருந்தார்கள். பெண்ணுரிமை திமுகவில் இல்லை. பூங்கோதை, ஆலடி அருணவிற்கு நடந்த கொடுமையை பார்த்தோம். இதர்கு எந்த நடவடிக்கையும் ஸ்டாலின் எடுக்கவில்லை. கனிமொழியும் இது குறித்து பேச வில்லை.

பாஜகவில் தினந்தினம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் சேர்ந்துவருகின்றனர்- எல் முருகன்

தினந்தினம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர். நரேந்திர மோடியின் ஆட்சி வேண்டும் என்றே பாஜகவில் இணைந்துவருகின்றனர். தமிழர்களுக்கு துரோம் செய்தது யார்? இலங்கையில் இன படுகொலை நடந்த போது திமுக, காங்கிரஸ் அதனை வேடிக்கை பார்த்தது. பாரதியாரின் உண்மையான படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை. வேறு மாதிரியாக சித்திகரித்தது திமுக.. இது போன்று திருவள்ளுவரை தவறாக சித்தரித்ததும் திமுக தான். தமிழகத்தில் 41 லட்சம் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் போட்டது மோடி அரசு” எனக் கூறினார்.