10 ஆண்டுகளாக ஊழல் செய்ய முடியாததால் திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது- எல் முருகன்

 

10 ஆண்டுகளாக ஊழல் செய்ய முடியாததால் திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது- எல் முருகன்

மதுரை திருப்பாலையில் நடைபெற்ற நம்ம ஊர் தாமரை பொங்கல் விழாவில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், “தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பாஜக பொங்கல் விழாவை நடத்தி வருகிறது. தமிழக பாஜக மிகப்பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதை தேச விரோத திமுக இரட்டிப்பு செய்து பேசி வருகிறது. திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் நல்ல திட்டங்களை பற்றி பொய் கூறி வருவதோடு, பொய்யான பிரச்சாரத்தை செய்துவருகின்றனர். போலியான பிரச்சாரம் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை திமுக நடத்தி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை திமுகவுக்கு மக்கள் கொடுப்பார்கள். விவசாய சட்டங்களுக்காக திமுக நடத்திய மிகப்பெரிய பந்த் தோல்வியிலேயே முடிந்தது. பட்டியலின மாணவர்களுக்கு உதவித்தொகையை நிறுத்தியதாக ஸ்டாலின் பொய்யான பிரச்சாரம் செய்தார்.

10 ஆண்டுகளாக ஊழல் செய்ய முடியாததால் திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது- எல் முருகன்

ஒவ்வொரு தலைவரையும் தியாகிகளையும் பாஜக போற்றுகிறது. 7 உட்பிரிவுகளை இணைத்து தேவந்திர குல வேளாளர் என பெயர் வைக்க மத்திய அரசு வகை செய்தது. இலங்கை தமிழர்கள் சாகும் போது வேடிக்கை பார்த்தவர்கள் திமுக. அதன் கூட்டணி கட்சிகள். மக்கள் அதனை மறக்க மாட்டார்கள். பத்து வருடமாக ஊழல் செய்ய முடியவில்லை என்பதால் திமுகவினர் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். திமுகவை சேர்ந்த முன்னாள் பெண் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு பாதுகாப்பு இல்லை. இதெல்லாம் கனிமொழிக்கு தெரியாதா? அவர் கட்சியை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை பற்றி கனிமொழி கேட்பதில்லை. கேபி முனுசாமி பேசியதற்கு பாஜக செய்தி தொடர்பாளர்கள் பதில் சொல்லுவார்கள்” எனக் கூறினார்.