நாங்கள் கை காட்டுபவர்கள் தான் தமிழகத்தின் முதல்வர்- எல் முருகன்

 

நாங்கள் கை காட்டுபவர்கள் தான் தமிழகத்தின் முதல்வர்- எல் முருகன்

சேலத்தில் நடைபெற்ற பாஜக வேல் யாத்திரை கூட்டத்தில் தமிழக தலைவர் முருகன் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட முருகன் உட்பட 2 ஆயிரம் பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய எல். முருகன், “சேலம் மக்கள் சேலம் மாம்பழம் போல இனிமையானவர்கள். பாஜக எங்கு இருக்கிறது என்று கேட்டனர். தற்போது அனைத்து கிராமத்திலும் பாஜக உள்ளது. நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அனைத்து மக்களும் பாஜக பக்கம் வருவதாலேயே இந்த ரத யாத்திரைக்கு தடை போட்டனர். கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் பின்னால் திமுக உள்ளது. கருப்பர் கூட்டத்திற்கு சட்ட உதவி செய்வது திமுக. கொரோனா காலத்தில் பாஜக ஒரு கோடி பேருக்கு உணவு, முக கவசம் வழங்கியுள்ளது. எந்த தடை வந்தாலும் இந்த யாத்திரை டிசம்பர் 7-ஆம் தேதி வரை நடக்கும்.

நாங்கள் கை காட்டுபவர்கள் தான் தமிழகத்தின் முதல்வர்- எல் முருகன்

டிசம்பர் 7-ஆம் தேதி திருச்செந்தூரில் ஒன்று கூடுவோம். நாம் தான் வரும் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். நாம் கை காட்டுபவர்கள் தான் தமிழகதின் முதல்வர். வெற்றி வேல் யாத்திரைக்கு எத்தனை தடை வந்தாலும் தொடர்ந்து யாத்திரை நடைபெறும். வரும் டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூரில் தமிழகமே வியக்கும் வகையிலான கூட்டம் ஒன்றுக்கூடும்” எனக் கூறினார்.