வேல் யாத்திரை யாருக்காக?- எல் முருகன் பதில்

 

வேல் யாத்திரை யாருக்காக?- எல் முருகன் பதில்

தமிழகத்தில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்ட நிலையில் தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்தது. இருப்பினும் கடந்த 6 ஆம் தேதி வேல் யாத்திரையை தொடங்கிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தற்போது வரை பல்வேறு இடங்களில் தடையை மீறி யாத்திரையை மேற்கொண்டுவருகிறார். இதனால் எல். முருகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் ஏற்படும் பாதிப்பு இருப்பதால் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனிடையே வேல் யாத்திரையை பாஜக விளம்பரத்திற்காக நடத்துவதாகவும், இதனால் மக்களுக்கும் நாட்டிற்கும் எந்த பலனும் இல்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் இது அரசியல் யாத்திரை என்பதாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார்.

வேல் யாத்திரை யாருக்காக?- எல் முருகன் பதில்

இந்த சூழலில் ஓசூர் காமராஜ் நகர் பகுதியில் பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் வேலுடன் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பேசிய எல் முருகன், “தமிழகத்தில் தமிழ் கடவுளை அவமானப்படுத்தினால் சும்மா இருக்க முடியுமா? வேல் யாத்திரை எத்தனை தடைகள் வந்தாலும் தடைகளை மீறி டிசம்பர் ஆறாம் தேதி வரை நடைபெறும். இறுதியாக வேல் யாத்திரை திருச்செந்தூரில் நிறைவு பெறும். கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசுபவர்களை தண்டிக்கவும், ஸ்டாலினின் முகத்திரை கிழிப்பதுக்கும் தான் யாத்திரை நடத்தப்படுகிறது” எனக் கூறினார்.