எம்ஜிஆர் போன்று பிரதமர் மோடியும் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் – எல்.முருகன்

 

எம்ஜிஆர் போன்று பிரதமர் மோடியும் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் – எல்.முருகன்

துரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், “சகோதரிகளை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். பெண்களை அவதூறாக பேசிய அவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகின்றது. ஆளுநர் வீட்டின் முன் திமுக தலைவர் தலைமையில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்கிறது. பெண்களுக்கெதிராக பேசுபவர்களை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த செல்லும் வழியிலேயே காவல்த்துறை கைது செய்தது கண்டிக்கத்தக்கது, நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் போன்று பிரதமர் மோடியும் மக்களுக்கு நல்லது செய்து வருகிறார் – எல்.முருகன்

தமிழகத்தில் எதிர்க் கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கும் காவல்துறை பாரதிய ஜனதா கட்சியின் போராட்டத்தை ஏன் தடுக்க வேண்டும்? தாய்மார்களை கேவலமாகவும் தரக்குறைவாகவும் பேசினால் தமிழகம் முழுவதும் விளம்பரம் தேடலாம் என்று சிலர் திட்டமிட்டு எதிர்க்கட்சியின் துணையோடு இந்த வன்முறைகளை செய்துவருகின்றனர். அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். எம்ஜிஆர் மக்களுக்கு எப்படி நல்லது செய்தாரோ அதே போன்று பிரதமர் மோடியும் மக்களுக்கு நல்லது செய்துவருகிறார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிக வலிமையாக உள்ளது. கூட்டணிக்குள் பிளவு என ஒரு மாயை ஏற்படுத்திவருகின்றனர்” எனக் கூறினார்.