திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ தான் – எல். முருகன்

 

திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ தான் – எல். முருகன்

திமுக தேர்தல் அறிக்கை ஜீரோவாகதான் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் தனியார் கடை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பின் பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த சட்டமன்ற தேர்தலை போன்று திமுகவின் தேர்தல் அறிக்கை இந்த சட்டமன்ற தேர்தலிலும் ஜீரோவாகதான் இருக்கும்

திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ தான் – எல். முருகன்

பாஜகவில் நிறைய பேர் இணைய உள்ளனர். மேலும் ஊராட்சி மன்ற பிரதிநிதிகள் திமுகவினரால் அவமானப்படுத்தப்படுவது கண்டனத்துக்குரியது, திமுகவில் இருக்கக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் தலைவர்கள் அறிக்கை விடுவது மட்டுமே வாடிக்கையாக வைத்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் திமுக இதுவரை எடுக்காதது ஏன்? மக்களை திசை திருப்பவே அறிக்கை விடுகின்றனர்” எனக் கூறினார்.

கூட்டணிக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக் கொண்டு விட்டதா என்ற கேள்விக்கு முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டேன் என்று மீண்டும் மழுப்பலான பதிலை எல்.முருகன் தெரிவித்தார்