அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகம்… கொந்தளித்த எல்.முருகன்!

 

அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகம்… கொந்தளித்த எல்.முருகன்!

சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கியது கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா உணவகம் ஏழை மக்கள் பசியுடன் வாடக் கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய முத்தாய்ப்பான திட்டமாய் கொண்டுவரப்பட்டது. மிக மிக குறைவான விலையில் ஏழை மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு உணவு அளுத்து அம்மா உணவகம் சேவை செய்து வருவதை அனைவரும் அறிந்ததே.

அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகம்… கொந்தளித்த எல்.முருகன்!

சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகள், விலைப்பட்டியல் போன்றவற்றை திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அடித்து நொறுக்கிய வீடியோ காட்சிகளைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி நடைபெற கூடாது.

Image

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறையை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாலினின் உத்தரவின் பேரில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர். மேலும் பெயர்த்தெடுக்கப்பட்ட பலகைகள் திமுகவினரால் அங்கே பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அராஜகத்தில் ஈடுபட்ட இருவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.