“கொரோனாவிலிருந்து மீண்டு வா அன்பே”… கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு!

 

“கொரோனாவிலிருந்து மீண்டு வா அன்பே”… கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு!

தமிழ்நாடு முழுவதும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார் திமுக எம்பி கனிமொழி. இரு தினங்களுக்கு முன் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நலம்பெற வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

“கொரோனாவிலிருந்து மீண்டு வா அன்பே”… கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு!

வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “எனக்கு கோவிட்- 19 தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். மருத்துவமனையில் எனக்குத் தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகின்றன.எனது உடல் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி! ” என்று கூறியிருந்தார்.

தற்போது இதனை ரீட்வீட் செய்துள்ள ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, “சீக்கிரமாக கொரோனாவிலிருந்து மீண்டு வா அன்பே” என ஆறுதல் கூறியுள்ளார். கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல் நாகரிகத்துடன் குஷ்பு கனிமொழிக்கு வாழ்த்து கூறியதை அனைவரும் சிலாகித்து வருகின்றனர். குஷ்பு திமுகவில் இருந்தபோது இருவருக்கும் நல்ல நட்பு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.