“ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்” – காய்ச்சி எடுத்த குஷ்பு!

 

“ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்” – காய்ச்சி எடுத்த குஷ்பு!

சேலத்தில் நேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல், பாஜகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். குறிப்பாக, தமிழக ஆட்சியாளர்களான ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் மானமில்லாமல் மோடி, அமித் ஷா காலில் விழுந்துகிடப்பதாகக் கூறினார்.

“ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்” – காய்ச்சி எடுத்த குஷ்பு!

தற்போது அதற்குப் பதிலடி கொடுத்துப் பேசியுள்ள குஷ்பு, “ராகுல் உண்மை தெரியாமல் பேசி இருப்பார் என்று நினைக்கிறேன். முதலில் அவரது கட்சிக்கு மானம் இருக்கிறதா என்று யோசித்து பார்த்து விட்டு பேச வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் அழுததை மறந்துவிட்டாரா? கூட்டணி பேசப்போகும் போது திமுக அவமரியாதை செய்வதாக வேதனைப்பட்டு பேசியது அவருக்கு தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

“ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்” – காய்ச்சி எடுத்த குஷ்பு!

அழுதும், கெஞ்சியும், அத்தனை அவமானங்களையும் தாங்கி தானே 25 சீட்களை வாங்கினார்கள். இதன் பிறகும் காங்கிரசுக்கு மானம் இருக்கிறதா? சிறிதளவேனும் மானம் இருந்து இருந்தால் அழவைத்த திமுகவோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்று வெளியே வந்திருக்க வேண்டும். அப்படி வந்திருந்தால் மரியாதை உள்ள கட்சி, மானம் உள்ள கட்சி என்று மக்கள் பாராட்டி இருப்பார்கள்.

“ஸ்டாலின்ட்ட கெஞ்சி கதறி சீட் வாங்குனது மறந்திருச்சா ராகுல்” – காய்ச்சி எடுத்த குஷ்பு!

ஆனால் தங்கள் தன்மானத்தை இழந்துவிட்டு தமிழர்களிடம் மானம் இருக்கிறதா என்று கேட்டால் சிரிக்கமாட்டார்களா? என்ன செய்வது? பாவம் ராகுல் இப்படித்தான் சிறுபிள்ளைத்தனமாக தெரியாமல் எதையாவது பேசுவார். அவரது பேச்சுக்கு பதில் சொல்வதே நேரத்தை வீணடிப்பது போல்தான்” என்றார். காங்கிரஸில் இருந்தபோது ராகுல் காந்தி வெட்கி நாணும் அளவிற்குப் புகழ்ந்து பேசிய குஷ்பு, பாஜகவில் சேர்ந்ததிலிருந்தே ராகுலை காய்ச்சி எடுக்கிறார். என்ன வன்மமோ…