நிர்மலா சீதாராமனிடம் சாரி கேட்ட குஷ்பு ! எதுக்கு?

 

நிர்மலா சீதாராமனிடம் சாரி கேட்ட குஷ்பு ! எதுக்கு?

காங்கிரசில் இருந்த போது பாஜகவை விமர்சித்ததற்காக குஷ்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சாரி கேட்டிருக்கிறார்.

தமிழ் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்த குஷ்பு இன்று வரை சின்னத்திரை, வெள்ளித்திரை என தனெக்கென தனி இடத்தை பெற்றிருக்கிறார். அரசியல் களத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறார். திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு சென்ற குஷ்பு, அண்மையில் பாஜகவுக்கு தாவினார். காங்கிரஸில் அவருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படாததால் அவர் பாஜகவுக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், பாஜகவில் அவருக்கு செய்தித் தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமனிடம் சாரி கேட்ட குஷ்பு ! எதுக்கு?

திமுகவில் இருந்த போது ஆளுங்கட்சியை விமர்சித்து கடுமையாக பேசுவார் குஷ்பு. அதையே தான் காங்கிரசில் இருந்த போதும் செய்தார். நீட் தேர்வு, மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்னைகளில் பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்தார். பாஜகவுக்கு எதிரான போராட்டங்களின் போது மோடியை கடுமையாக விமர்சித்தார். தற்போது தான் எதிர்ப்பு தெரிவித்த கட்சியிலே தான் செய்தித் தொடர்பாளர் பதவி வகிக்கிறார். அரசியலில் இதெல்லாம் சகஜம் தானே..

நிர்மலா சீதாராமனிடம் சாரி கேட்ட குஷ்பு ! எதுக்கு?

வரும் சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடவிருக்கும் குஷ்பு, காங்கிரசில் இருந்த போது விமர்சித்த பாஜக தலைவர்களிடம் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கிறாராம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் மன்னிப்பு கோரியிருக்கிறார். தான் பேசியதெல்லாம் அரசியல் ரீதியானது தான், அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமனிடம் சாரி கேட்ட குஷ்பு ! எதுக்கு?

அதற்கு நிர்மலா சீதாராமன், டேக் இட் ஈஸி என சுருக்கமாக பதில் அளித்து விட்டாராம். அதோடு, நீங்கள் என்னை விமர்சித்ததையும் ட்விட்டரில் பதிவிட்டதையும் நான் பார்த்ததில்லை என்றும் டோன்ட் வொரி என்றும் கூறி குஷ்புவுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். இதை குஷ்பு எதிர்பார்த்திருக்க மாட்டார் போல..!