13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

 

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர், தனது 13 வயது மகளை, வியாசர்பாடியைச் சேர்ந்த சகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், மகளை மீட்டுத் தருமாறும் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சகிதா பானுவிடம் விசாரணை தொடங்கியது காவல்துறை. அதில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மதன்குமாருடன் சேர்ந்து சகிதா பானு, வேலை வாங்கி தருவதாகக் கூறி, பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. மேலும் அவர் அளித்த தகவலில், புகாரளிக்கப்பட்ட 13 வயது சிறுமியை கட்டாயப் படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

13 வயது சிறுமியை வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி! எந்த கட்சியாக இருந்தாலும் இரக்கமில்லாமல் தண்டியுங்கள்- குஷ்பு

இது தொடர்பாக மதன்குமாரின் தாயார் செல்வி, அவரது தங்கை சத்தியா மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 12 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் காவல்துறை விசாரணையில், பாஜகவை சேர்ந்த நிர்வாகியும், அவரது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தியும் சிறுமியிடம் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, “இது பயங்கரமானது. இந்த வழக்கை விசாரிக்க வேண்டும், குற்றவாளிகள், அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எந்த பதவியில் இருந்தாலும், எந்தத் துறையில் பணிபுரிந்தாலும் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்களை இரக்கமும் இன்றி தண்டிக்க வேண்டும். நீதியை தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்கப்பட வேண்டும். குழந்தைக்கு எங்கள் ஆதரவு தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.