களமிறங்கும் குஷ்பு.. தேர்தலுக்காக எடுத்த அதிரடி முடிவு!

 

களமிறங்கும் குஷ்பு.. தேர்தலுக்காக எடுத்த அதிரடி முடிவு!

தேர்தலுக்காக தனது சொந்த பணத்தை செலவு செய்ய உள்ளதாக ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணியில் இணைந்து களம் காணுகிறது. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 17 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. அதில், நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த தொகுதியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட குஷ்பு, கட்சிக்காக பாடுபடுவேன். வெற்றி பெறுவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

களமிறங்கும் குஷ்பு.. தேர்தலுக்காக எடுத்த அதிரடி முடிவு!

இந்த நிலையில், சென்னை அண்ணாசாலையில் இருக்கும் பாஜக தேர்தல் அலுவலகத்தில் குஷ்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த பாஜக தலைமைக்கு நன்றி. ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று, எனது வெற்றியை மோடி மற்றும் அமித்ஷா கைகளில் சமர்ப்பிப்பேன். வாஷிங் மெஷின் கொடுப்பது மக்களுடைய எதிர்பார்ப்பு தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவிலும் சரி, காங்கிரஸிலும் சரி குடும்ப அரசியல் இருக்கிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்றில் இருந்தே தொடங்குகிறேன். எனது சொந்த பணத்தை செலவு செய்ய உள்ளேன். பாஜகவுக்கு வாக்களித்தால் மக்களின் வாழ்க்கை நலமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.