வேல் யாத்திரையில் திமுக , காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்பு- குஷ்பு

 

வேல் யாத்திரையில் திமுக , காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்பு- குஷ்பு

திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வித்யாலயா என்னுமிடத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரை பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். மேடை அனுமதி இல்லாத காரணத்தினால், திறந்தவெளி ஜீப்பில் நின்றவாறு தொண்டர்களிடையே குஷ்பு பேசினார். அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னால் மத்திய இணையமைச்சர் பொண்.ராதாகிருஷ்ணன் மற்றும்ம் நடிகை குஷ்பு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேல் யாத்திரையில் திமுக , காங்கிரஸ் கட்சியினரும் பங்கேற்பு- குஷ்பு

முன்னதாக கூட்டத்தில் பேசிய நடிகை குஷ்பு, “தமிழகத்திற்கு பாஜக 67 ஆயிரம் கோடிக்கு திட்டம் கொடுத்துள்ளது. மக்களை சந்திக்காமல் வெளிநாடுக்குப்போய் ஓய்வெடுக்கும் தலைவர் மோடி இல்லை. திமுகவில் கோவிலுக்கு செல்பவர்களை வேண்டாம் என சொல்ல முடியுமா ?? வேல் யாத்திரையில் திமுக , காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டு வருகின்றனர். திரைப்படத்தில் மாற்று மத விமர்சனம் வந்தால் மட்டும் உடனே நீக்கப்படுகிறது. 2021 ல் கூட்டணி பீகாரில் ஜெயித்ததுபோலா தமிழகத்திலும் பாஜக ஜெயிக்கும்” எனக் கூறினார்.