மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார் – குஷ்பு

 

மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார் – குஷ்பு

சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழகத்திற்குள் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென பல்வேறு பகுதிகளில் பாஜக, வெற்றிக் கொடி ஏந்திய தமிழகம் என்ற பேரணியை நடத்திவருகிறது. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற பேரணியில், திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பொறுப்பாளர் குஷ்பு பங்கேற்றார். அவருடன் நூற்றுக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்று குஷ்புவுடன் நடைபயணமாக சென்றார்

மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார் – குஷ்பு

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பெசிய நடிகை குஷ்பு , “எங்களின் வெற்றிக்கு சேப்பாக்கம் தொகுதி பிள்ளையார் சுழி போட்டுள்ளது. பிரதமர் மோடி தினமும் 20 மணி நேரம் மக்களுக்காக உழைக்கிறார். அதிமுக மற்றும் பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. பாஜக தனது முதல் எம்எல்ஏ கணக்கை சேப்பாக்கம் தொகுதியில் இருந்து தொடங்கியுள்ளது” எனக் கூறினார்.

பாஜக தரப்பில் போட்டியிடப் போகும் உத்தேச வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. அந்த பட்டியலில் நடிகை குஷ்புவுக்கு சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.