”பிரதமர் மோடி முடிவு எடுப்பானா” ஒருமையில் பேசிய குஷ்பு!

 

”பிரதமர் மோடி முடிவு எடுப்பானா” ஒருமையில் பேசிய குஷ்பு!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவரும் சூழலில் தமிழகம் முழுவதும் “மோடி விவசாய நண்பன்” எனும் நிகழ்ச்சியை பாஜக தொடங்கியுள்ளது. வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை விவசாயிகளுடன் கலந்தாலோசித்து உணர்த்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்த பாஜக செய்திதொடர்பாளர் குஷ்பு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

”பிரதமர் மோடி முடிவு எடுப்பானா” ஒருமையில் பேசிய குஷ்பு!

அப்போது, முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் அதிமுக,பாஜக இடையே பிளவு ஏற்படுமா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகை குஷ்பு, இதுகுறித்து முதல்வர் வேட்பாளர் பற்றி பாஜக மாநிலத் தலைவர்கள் சொல்லி இருக்கிறார். அதற்கு தமிழக முதல்வர் பதிலளித்திருக்கிறார், இரு தலைவரும் பேசிக்கொள்கிறார்கள், நடுவில் யாரும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்த குஷ்பூ, கூட்டணி பற்றிய முடிவுகளை தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து இதைக்குறித்து பிரதமர் மோடி முடிவு எடுப்பானா? என ஒருமையில் விமர்சித்ததால் உடனிருந்த பாஜகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டது.