காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு!

 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு!

நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து தான் விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, பாஜகவில் இணையவிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்த குமாரின் உருவப்பட திறப்பு விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை, டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என குஷ்பு வருத்தம் தெரிவித்திருந்தார். இதனால் மனமுடைந்த குஷ்பு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு!

இதன் மூலமாக அவர் பாஜகவில் தான் இணைய உள்ளார் என்ற தகவல் உறுதியானது. இருப்பினும் சமீபத்தில் உத்ராஸ் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு, பாஜக அரசை விமர்சித்து பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு!

இந்த நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் குஷ்பு!

அதில், நீண்ட யோசனைக்கு பிறகே தான் விலகுவதாகவும் கட்சியின் உயர் பதவியில் இருக்கும் சிலர் தன்னை ஒடுக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ராகுல் காந்தி உள்ளிட்ட காங். நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து ராஜினாமா இந்த ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். குஷ்பு இன்று மதியம் பாஜகவில் இணைய உள்ளது உறுதியானதால், அவரது தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.