பிரதமர் மோடிக்கு ஏன் தூக்கம் வரவில்லை தெரியுமா? குஷ்பு புது விளக்கம்

 

பிரதமர் மோடிக்கு ஏன் தூக்கம் வரவில்லை தெரியுமா? குஷ்பு புது விளக்கம்

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி சார்பில் அ.ம.மு.க.வின் என்.வைத்தியநாதன் ஆகியோர் களம் காணுகின்றனர். பாஜக சார்பில் களமிறங்கியுள்ள குஷ்பு, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

பிரதமர் மோடிக்கு ஏன் தூக்கம் வரவில்லை தெரியுமா? குஷ்பு புது விளக்கம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட நடிகை குஷ்பு, “என் தொகுதி மக்கள் என்னை வீட்டில் இருக்கும் சகோதரியாகப் பார்க்கிறார்கள். அவர்களின் பிரச்னைகளை நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். உங்களால்தான் எங்கள் பிரச்னைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்புகின்றனர்.பிரதமர் மோடி மக்களுக்கு என்ன செய்யலாம் என யோசித்து கொண்டிருப்பதால் அவருக்கு தூக்கம் வரவில்லை. எம்.எல்.ஏவாக ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் சொன்னதை செய்யவில்லை என்றால் என் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபடுங்கள்” எனக் கூறினார்.