குறுவை நெல் சாகுபடி திட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

 

குறுவை நெல் சாகுபடி திட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடி மதிப்பிலான தொகுப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மாவட்டம் முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும். கடலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் திட்டம் செயல்படுத்தப்படும். குறுவை நெல் சாகுபடி திட்டத்தால் 2.07லட்சம் விவசாயிகள் பயனடைவர். குறுவை நெல் சாகுபடிக்காக இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறுவை நெல் சாகுபடி திட்டம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும், 2,870 மெட்ரிக் டன் சான்று நெல் விதைகள் 24,000 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுர விதைகள் மானிய விலையில் வழங்கப்படும். 1.90 லட்சம் ஏக்கர் பரப்பில் முழு மானியத்தில் ரசாயன உரங்கள் என இடுபொருட்களுக்கு ரூ.50 கோடி நிதியுதவி தரப்படும். வேளாண் இயந்திரங்கள் வழங்க, பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ.11.09 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.