குன்றத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டிமுனி கொரோனாவால் பலி!

 

குன்றத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டிமுனி கொரோனாவால் பலி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,175 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,73, 460 ஆக அதிகரித்துள்ளது.

குன்றத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டிமுனி கொரோனாவால் பலி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,461 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 5ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

குன்றத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டிமுனி கொரோனாவால் பலி!

இந்நிலையில் சென்னை குன்றத்தூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டிமுனி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அந்த பாண்டி முனி சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.