குமாரபாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

 

குமாரபாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

நாமக்கல்

குமாரபாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன், கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சரவணன் (55). காவல் நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சரவணனுக்கு கடந்த 10ஆம் தேதி அன்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.

குமாரபாளையம் சிறப்பு உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 20ஆம் தேதி நாமக்கல் மாவட்ட அரசு மருத்துமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சரவணன், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனாவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் பலியான சம்பவம் குமாரபாளையத்தில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.