உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த நபரிடம் சாதிப்பெயர் கேட்ட எஸ்.ஐ ; அதிரடி நடவடிக்கை!

 

உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த நபரிடம் சாதிப்பெயர் கேட்ட எஸ்.ஐ ; அதிரடி நடவடிக்கை!

குமாரபாளையம் அருகே காலில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நபரிடம் சாதிப்பெயர் கேட்ட சிறப்பு காவல் உதவியாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் சிலர் பணிக்காக கோவைக்கு வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்துள்ளனர். அவர்கள் சென்ற வாகனம், குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்த நிலையில் ஒருவர் கால் மீது கன்டெய்னர் லாரி ஏறி துண்டாகியுள்ளது. அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.

உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த நபரிடம் சாதிப்பெயர் கேட்ட எஸ்.ஐ ; அதிரடி நடவடிக்கை!

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குமாரபாளையம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் அத்தியப்பன், காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யாமல் அங்கிருந்த நபர்களிடம் சாதிப்பெயர் குறித்து கேட்டுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி சர்ச்சைக்குள்ளானது. அதைக் கண்ட உயரதிகாரிகள் அத்தியப்பனை நாமக்கல் ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.