செல்வச் செழிப்பைத் தரும் குபேர மந்திரம்!

 

செல்வச் செழிப்பைத் தரும் குபேர மந்திரம்!

செல்வங்களின் அதிபதி குபேரன். குபேரனை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. செல்வம், செழிப்பு, மகிமை ஆகியவற்றின் அடையாளமாக குபேரன் விளங்குகிறார். இந்து மதம் மட்டுமின்றி சமணம், புத்த மதம் கூட குபேரனை செல்வத்தின் கடவுள் என்று சொல்கின்றன.

இந்த உலகம் முழுமைக்கும் செல்வத்தை வழங்குபவராகவும் பராமரிப்பவராகவும் பாதுகாப்பாளராகவும் குபேரன் விளங்குகிறார். அவரை நினைத்து மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன்கள் கிட்டும்.

செல்வச் செழிப்பைத் தரும் குபேர மந்திரம்!

மந்திரம்:

ஓம் ஹ்ரீம் க்ளீம்சௌம்

ஸ்ரீம் கும் குபேராய

நரவாகனாயயக்ஷ ராஜாய

தன தான்யாதிபதியே

லக்ஷ்மி புத்ராய

ஸ்ரீம் ஓம் குபேராய நமஹ!

குபேரனின் அனுக்கிரகம் கிடைக்க அவரது மந்திரத்தை மனப்பாடம் செய்து மனதில் நிறுத்த வேண்டும். தினமும் காலையில் குபேரனுக்கு இதயத்தில் இருந்து பூஜை செய்ய வேண்டும். தினமும் இந்த மந்திரத்தை 108 முறை என மூன்று மாதங்களுக்குச் சொல்லி வர வேண்டும். 

108 முறை சொல்ல முடியாதவர்கள் தினமும் ஏழு முறை என்று 21 நாட்களுக்கு இதை சொல்லி வரலாம். இந்த மந்திரத்தைச் சொல்லும்போது நம் உடலில் ஏற்படும் நேர்மறையான அதிர்வுகள் மனதையும் உடலையும் தூய்மைப்படுத்தும். நல்ல பலன்கள் கிடைக்கும்.